'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் ராதே ஷ்யாம் படம் வெளியானது. பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ராதே ஷ்யாம் மூலம் அதை பிரபாஸ் அதை ஈடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியுள்ளது. இதற்கு அடுத்ததாக பிரசாந்த் நீல் டைரக்ஷனில் நடித்து வரும் சலார் படத்தை பிரபாஸ் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் சலார் படத்தின் படப்பிடிப்பின்போது பிரபாஸுக்கு சில காயங்கள் ஏற்பட்டன. தற்போது இதற்காக ஒரு மைனர் சர்ஜரி செய்ய வேண்டி இருப்பதால் ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்புகிறார் பிரபாஸ். இந்த தகவலைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மைனர் சர்ஜரி முடிந்து அவர் விரைவில் குணமாகி திரும்ப வேண்டுமென சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.




