ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் திரில்லர் வெப்சீரிஸ் 'விலங்கு'. காவல்துறையினரை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மம் நிறைந்த குற்றத்தை புரிந்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு விமல் வசம் வருகிறது. வழக்கமாக வரும் குற்றப்பின்னணி கொண்ட கிரைம் போலீஸ் கதைகள் போல இல்லாமல் ஒரு மாறுபட்ட கதை களத்தை இத்தொடர் கொண்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் நாளை(பிப்., 18) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதையடுத்து இரண்டு தினங்களில் இந்த தொடர் சிறப்பு காட்சியாக ஜீ தமிழ் டிவியில் வரும் பிப்., 20 அன்று ஞாயிற்றுகிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஓடிடியில் பார்க்க முடியாதவர்கள் ஜீ தமிழில் காணலாம்.