இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு முன்னே நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். ஆனால், அவருக்கு அந்த காலக்கட்டத்தில் நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதே போல், திரைபிரபலமாக இருந்தாலும், திரைக்கு வெளியே அவர் செய்த சர்ச்சைகளால் தான் அவர் மிகவும் பிரபலமானார் என்பது வேறு கதை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது கேரியரில் டர்னிங் பாய்ண்டை அடைந்துள்ள வனிதா விஜயகுமார், நடிப்பு, பிசினஸ் என பொறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படம் ஒன்றின் புரோமோஷனில் பேசிய அவர், சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன் என பேட்டியளித்துள்ளார்.
தில்லு இருந்தா போராடு என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வனிதா, அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, 'சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தைக் கோட்டைவிட்டு விட்டேன். முட்டாள்தனம் செய்துவிட்டேன். வில்லியாக தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன். இனி காமெடியோ, வில்லியோ, குணச்சித்திரமோ சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் ஒரு கை பார்ப்பதாக முடிவு செய்துவிட்டேன்' என கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார் சமிபத்தில் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




