அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா | 26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடிக்கும் தபு |

தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு முன்னே நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். ஆனால், அவருக்கு அந்த காலக்கட்டத்தில் நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதே போல், திரைபிரபலமாக இருந்தாலும், திரைக்கு வெளியே அவர் செய்த சர்ச்சைகளால் தான் அவர் மிகவும் பிரபலமானார் என்பது வேறு கதை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது கேரியரில் டர்னிங் பாய்ண்டை அடைந்துள்ள வனிதா விஜயகுமார், நடிப்பு, பிசினஸ் என பொறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படம் ஒன்றின் புரோமோஷனில் பேசிய அவர், சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன் என பேட்டியளித்துள்ளார்.
தில்லு இருந்தா போராடு என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வனிதா, அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, 'சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தைக் கோட்டைவிட்டு விட்டேன். முட்டாள்தனம் செய்துவிட்டேன். வில்லியாக தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன். இனி காமெடியோ, வில்லியோ, குணச்சித்திரமோ சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் ஒரு கை பார்ப்பதாக முடிவு செய்துவிட்டேன்' என கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார் சமிபத்தில் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.