பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழில் ரன் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டக்கோழி படமும் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்தது. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறிமாறி நடித்துவந்த மீரா ஜாஸ்மின், கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு இடைவெளி விட்டார்.
கடைசியாக 2015ல் மீரா ஜாஸ்மின் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இந்தநிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் இந்த நடவடிக்கையை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது புகைப்படத்துடன் முதல் பதிவை வெளியிட்டுள்ளார் மீரா ஜாஸ்மின். இதுவரை 6௦ ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மீரா ஜாஸ்மினை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.