மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழில் ரன் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டக்கோழி படமும் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்தது. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறிமாறி நடித்துவந்த மீரா ஜாஸ்மின், கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு இடைவெளி விட்டார்.
கடைசியாக 2015ல் மீரா ஜாஸ்மின் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இந்தநிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் இந்த நடவடிக்கையை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது புகைப்படத்துடன் முதல் பதிவை வெளியிட்டுள்ளார் மீரா ஜாஸ்மின். இதுவரை 6௦ ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மீரா ஜாஸ்மினை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.




