பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு முன்னே நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். ஆனால், அவருக்கு அந்த காலக்கட்டத்தில் நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதே போல், திரைபிரபலமாக இருந்தாலும், திரைக்கு வெளியே அவர் செய்த சர்ச்சைகளால் தான் அவர் மிகவும் பிரபலமானார் என்பது வேறு கதை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது கேரியரில் டர்னிங் பாய்ண்டை அடைந்துள்ள வனிதா விஜயகுமார், நடிப்பு, பிசினஸ் என பொறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படம் ஒன்றின் புரோமோஷனில் பேசிய அவர், சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன் என பேட்டியளித்துள்ளார்.
தில்லு இருந்தா போராடு என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வனிதா, அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, 'சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தைக் கோட்டைவிட்டு விட்டேன். முட்டாள்தனம் செய்துவிட்டேன். வில்லியாக தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன். இனி காமெடியோ, வில்லியோ, குணச்சித்திரமோ சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் ஒரு கை பார்ப்பதாக முடிவு செய்துவிட்டேன்' என கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார் சமிபத்தில் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.