இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் திகழ்ந்தார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த மகேஸ்வரி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
அவரது திருமண வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லவில்லை. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி விரைவிலேயே விவகாரத்து பெற்றார். மகேஸ்வரிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தனிமை குறித்து மிகவும் வருந்தி பேசியுள்ளார். அதில், 'ரெண்டாவது கல்யாணத்த பத்தி யோசிக்கவே முடியல. யார் மேலயும் நம்பிக்கை வரவே மாட்டங்குது. என்னோட பையன், என்னோட அம்மா, என்னோட கேரியர் மூன்றையும் பேலன்ஸ் பண்ணி ஆகனும். இத புரிந்து கொள்கிற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்வு பண்ண முடியல. வரபோறவர் என்னுடைய பையனையும் ஏற்றுக் கொள்ளணும். அதனால இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்கிற பயம் இருக்கு. நானும் என் அம்மாவும் சிங்கிள் மதர் தான்' என்று பேசும் போது வீஜே மகஸ்வரி, அழுது கொண்டே பேசினார்.