அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி |

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. பிரம்மாண்ட உருவாகியுள்ள இப்படம் வரும் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் விளம்பர பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் டிவி நேர்காணலில் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ராமோஜி பிலிம் சிட்டியில் ஒருமுறை அஜித்தை சந்தித்தேன். பெரிய உணவகம் ஒன்றில் அவர் வேறு இடத்தில் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தார். நான் இங்கே இருந்தேன். அப்போது என்னை பார்த்த அஜித், சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார்.
அதன்பிறகு என்னை அழைத்து சென்று அவர் உட்கார சொன்னார். அப்போது என்னுடைய மனைவி வந்தார். அவரிடம் நான் அஜித் என்று அறிமுகம் செய்துக்கொண்டார். இந்த விஷயம் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது. சமீபத்தில் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அது என்னவென்றால், ரசிகர்கள் அவரை தல தல என்று அழைப்பார்கள். தல வேண்டாம், அஜித் அல்லது ஏகே என கூப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்திற்கு உண்மையாகவே தலை வணங்குகிறேன் என்று அவர் அஜித்தை புகழ் தள்ளியுள்ளார்.




