தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாநாடு. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை முதலில் கலைஞர் டிவி வாங்க தான் பேசி வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி நிறுவனம் வருகிற பொங்கலுக்கு மாநாடு படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டது.
ஆனால் மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள சோனிலிவ் நிறுவனமோ, மாநாடு படம் ஓடிடி தளத்தில் வெளியாகி 75 நாட்கள் ஆன பிறகே டிவியில் ஒளிபரப் பப்பட வேண்டும் என்று ஒரு கண்டிசனை போட்டு விட்டது. அதன்காரணமாகவே கலைஞர் டிவி பின்வாங்கிவிட இப்போது மாநாடு டிவி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் வெளியாகியிருப்பதால் நான்கு வாரங்கள் கழித்து அதாவது இந்த மாதம் இறுதியில் சோனி லிவ் ஓடிடியில் மாநாடு படம் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.