'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

சூர்யா தயாரித்து நடித்து வெளியான ஜெய்பீம் படம் மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கியது. இப்போதுவரை அந்த பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சிம்புவின் மாநாடு படமும் தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள் ளது.
அதாவது, ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டர் காட்சிக்கு எதிராக பாமகவினர் கொடி பிடித்த நிலையில், தற்போது மாநாடு படத்திற்கு எதிராக பாஜகவினர் கொடி பிடித்துள்ளனர். மாநாடு படத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. அதனால் தமிழக அரசு தலையிட்டு அதுபோன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ., சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு, மாநாடு படத்தில், அமெக்காவில் குண்டு வெடிச்சா பயங்கரவாதி என்கிறோம். இந்தியாவில் வெடித்தால் முஸ்லீம் பயங்கரவாதி என்கிறோம். பயங்கரவாதிக்கு ஏது சாதி மதம் என்று இஸ்லாமியராக நடித்துள்ள சிம்பு பேசுவதையும் குறிப்பிட்டுள்ள பா.ஜ.,வினர், அப்படத்தின் கடைசி காட்சியில் ரயில் நிலைய பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதை காண்பிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் மாநாடு படத்திற்கு எந்தமாதிரியான ரியாக்சனை ஏற்படுத்தப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.




