தொடர்கிறது…. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி | 'காந்தாரா' தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி இடையே மோதல்? | இசையமைப்பாளரான இயக்குனர் : நடிகரான பிரபுதேவா மகன் | துணிச்சலான காவல்துறை அதிகாரி வேடத்தில் சம்யுக்தா! | ஓடிடியில் வெளியானது அர்ஜுனின் சீதா பயணம்! | யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! | 'துரந்தர் தி ரிவெஞ்ச்' மற்ற மொழி தணிக்கை தாமதம் | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..! | பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்” | கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்? |

தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் இளம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற 'ஸ்ரீவள்ளி', 'சாமி சாமி' பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போதும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் படப்பிடிப்பின் லஞ்ச் இடைவெளியில் சுவாரசியமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் கை விரல்கள் பகுதி மட்டும் அவரது வழக்கமான உடல் நிறத்தில் இருக்க, கையின் மற்ற பகுதி கருப்பு நிறத்தில் இருக்கிறது.
படத்தில் மேக்கப் மூலம் அவரை கருப்பான பெண்ணாக மாற்றியிருக்கிறார்கள். மேக்கப் மூலம் எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க ராஷ்மிகா இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பார் போலிருக்கிறது.
செம்மரக் கடத்தல் பற்றிய படம் என்பதால் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் தமிழர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போதே எழுந்தது. படம் வெளிவரும் சமயம் ஏதாவது சர்ச்சைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




