ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்தியன்-2வை கிடப்பில் போட்டு விட்டு, ராம்சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க தயாரானார் ஷங்கர்.
ஆனால் அதை எதிர்த்து லைகா நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இரண்டு தரப்பிலும் சமாதானம் ஏற்படாத நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதியை இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காணும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதையடுத்து, நடந்த விசாரணைக்குபிறகு தெலுங்கு படத்தை ஷங்கர் இயக்க தடையில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனபோதிலும் லைகா நிறுவனம் தொடர்ந்து இந்தியன்-2 படத்தை இயக்கிய பிறகுதான் வேறு படத்தை இயக்க ஷங்கரை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியன்-2 வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஷங்கர்-லைகா நிறுவனத்திற்கிடையிலான பிரச்சினையை மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி பேசி தீர்த்து வைப்பார் என்று அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர். அதனால் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவு வெளியாகும் என்று தெரிகிறது.




