
ரக்ஷித் ஷெட்டி இயக்கும் ரிச்சர்ட் அந்தோணி
தற்போது ரிச்சர்ட் அந்தோணி என்ற பேண்டசி திகில் படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். கார்ம் சாவ்லா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி ரக்ஷித் ஷெட்டி கூறியதாவது: ரிச்சர்ட் அந்தோணி உலிடவரு கண்டந்தி படத்தின் 2ம் பாகம் என்றும் இதனை சொல்லலாம். அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், இது அதைவிடவும் இன்னும் சுவாரஸ்யமானது, பிரமாண்டமானது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் உலிடவரு கண்டந்தி எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பதுபோல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் போல.
இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்தபோது அதை நான் வடித்திருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். இதன் அடுத்த கட்டத்தையும் நான் எழுதுவேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!