திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு |
மகாநடி படம் மூலம் தென்னிந்திய நடிகையாக மாறிவிட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இந்திப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அனைத்து மொழிகளிலும் கைவசம் படங்களை வைத்திருப்பதால் படப்பிடிப்பிற்காக பிசியாக கலந்து கொண்டு வருகிறார். இதனால் தற்போது தெலுங்கில் அவர் நடித்து, விரைவில் வெளியாக உள்ள 'ரங்தே' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றே சொல்லப்பட்டது..
அதனால் இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிதின், கீர்த்தி சுரேஷ் புரமோஷன் நிகழ்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வித்தியாசமான பாணியில் வேண்டுகோள் விடுத்தார். கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால போட்டோ ஒன்றை தனது கையில் வைத்தபடி சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிதின், “மிஸ்ஸிங்.. காணவில்லை. டியர் அனு.. ரங்தே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்பது எங்களுடைய மேலான கோரிக்கை.. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்” என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். .
இதனையே அழைப்பாக ஏற்று கீர்த்தி சுரேஷும் தவறாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.. இந்தப்படத்தில் அனுவாக கீர்த்தி சுரேஷும், அர்ஜுனாக நிதினும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.