தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் காட்பாதர். மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் அக்டோபர் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தியை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி சல்மான்கான் இருவரும் இணைந்து நடித்திருப்பதால் அதிகம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தநிலையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி இரண்டிற்குமான ஓடிடி உரிமை பிரபல நிறுவனம் ஒன்றால் 57 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரொடக்சன் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதால் அதை தனியாக தயாரித்த சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த இழப்பை காட்பாதர் வியாபாரமும் வசூலும் ஓரளவு ஈடுகட்டும் என தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.




