ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியை வைத்து பீஷ்ம பர்வம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மார்ச்-3ல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை ரசிகர்கள் தங்கள் மொபைல்போனில் படம் பிடித்து அவற்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது இயக்குனர் அமல் நீரத்தை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
உடனே இது குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக, 'ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து என்ஜாய் செய்து ரசியுங்கள், அதேசமயம் தயவுசெய்து யாரும் படக்காட்சிகளை மொபைல் போனில் பதிவு செய்வதோ அவற்றை சோசியல் மீடியாவில் பரப்புவதோ செய்ய வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்... கொரோனா தாக்கம் நிலவிய இந்த இரண்டு வருட காலத்தில் இந்த படத்தை எடுத்து முடிக்க நாங்கள் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறோம். தயவுசெய்து அதை வீணடித்து விட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.




