டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் : ராய் லட்சுமி | தலைமைச் செயலகம் : வசந்த பாலன் இயக்கும் அரசியல் தொடர் | வாய்ப்பு தேடும் பிரியா ஆனந்த் | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் படம் | முதன்முறையாக இமான் இசையில் பின்னணி பாடிய மனோ | பாகுபலி 3ம் பாகம் உருவாகும் : உறுதிப்படுத்திய ராஜமவுலி | மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் |
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, கொரோனா தொற்றின் முதல் அலை வீசும்போதே பல சமூக பணிகளை செய்தார். தற்போது இரண்டாம் அலை வீசும் நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் செய்யப்படுகிறது. இதனை அவர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்த செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் உருவாக்கும் மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் வந்து விட்டது. விரைவில் இந்த பணி முடிவடையும் என்று தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி தமிழில் ரஜினி ஜோடியாக காலா படத்தில் நடித்தார். தற்போது அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பெல்பாட்டம் என்ற படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்து முடித்திருக்கிறார்.