'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றும் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போகிறார்கள் என்றும் குடும்ப நிகழ்வுகளில் கூட அவர்கள் இணைந்து பங்கேற்பது இல்லை என்பது போன்று செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அதன் பிறகு சோசியல் மீடியாவில் தாங்கள் ஒன்றாக இருப்பது போல ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராய் தரப்பில் முற்றுப்புள்ளி வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்வில் ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளதுடன் சுற்றுலா பயணமாக வெளியே கிளம்பி சென்று விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயமும் வழக்கம் போல அமிதாப்பச்சன் குடும்பத்திற்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே இப்போதும் கருத்து வேறுபாடு தொடர்கிறது என்கிற பரபரப்பை மீண்டும் துவங்கி வைத்து உள்ளது.




