'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

ஹிந்தித் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தீபிகா படுகோனே. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக அவர் நடிக்க இருந்த 'ஸ்பிரிட்' படத்திலிருந்து முதலில் நீக்கப்பட்டார். அதன்பின் 'கல்கி 2898 ஏடி' படத்திலிருந்தும் நீக்கப்பட்டார். 'ஸ்பிரிட்' படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிறைய உதவியாளர்கள் கேட்கிறார், 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன் என கண்டிஷன் போடுகிறார் என அவர் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரையில் எதுவும் பேசாமல் இருந்தவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான பதிலைத் தந்திருக்கிறார்.
“நான் பெயர்களை சொல்ல விரும்பவில்லை அல்லது இதை பெரிய விஷயமாக்க விரும்பவில்லை. ஆனால் பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக தினசரி 8 மணி நேரம் வேலை செய்கின்றனர், திங்கள் முதல் வெள்ளி வரை, அவர்கள் வார இறுதிகளில் வேலை செய்வதில்லை என்பது பரவலாக அறியப்பட்டது. இப்போது, பல பெண்களும் புதிய தாய்மார்களும் 8 மணி நேர ஷிப்ட்களில் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர், ஆனால் அது ஒருபோதும் தலைப்புச் செய்திகளில் வருவதில்லை.
எனது தொழில் வாழ்க்கை முழுவதும் இதை எதிர்கொண்டுள்ளேன். சம்பளம் உள்ளிட்ட, எனக்கு வரும் எதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் எனது போராட்டங்களை அமைதியாக போராடியுள்ளேன். சில சமயங்களில் அந்த போராட்டங்கள் பொதுவில் வருகின்றன, அது நான் வளர்க்கப்பட்ட விதம் அல்ல. ஆனால் அவற்றை அமைதியாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வதை நான் நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.




