சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பத்மவாத், தேவதாஸ், பஜிரா மஸ்தானி போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த 'கங்குபாய் கத்வாதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இவர் ஷாருக்கான் வைத்து 'இன்ஷா அல்லா' என்கிற படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து ஷாருக்கான் இந்த படத்தை விட்டு வெளியேறினார் என கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்து இயக்கும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுசல் ஆகியோர் இணைந்து நடிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மேலும், இது 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது.