அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்து ராசியான ஜோடி என்கிற வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றனர். இதை தொடர்ந்து தற்போது வரை அவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாகவும் அதை அவர்கள் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்திருக்கிறது என்கிற தகவலை ஹிந்தி நடிகரும் தற்போது அனிமல் படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவருமான ரன்பீர் கபூர் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு சேனல் ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி தரும் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மற்று இயக்குனர் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரன்பீர் கபூர், ‛‛சந்திப் ரெட்டி வங்கா முதன்முதலாக ராஷ்மிகாவை சந்தித்தது அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்காக விஜய் தேவரகொண்டா தனது வீட்டில் கொடுத்த பார்ட்டியின்போது தான் என்று கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படம் வெளியானது 2017 ஆகஸ்ட் மாதம். கீதா கோவிந்தம் படம் வெளியானது 2018 ஆகஸ்ட் மாதம். அதாவது கீதா கோவிந்தம் பட அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நட்பாக இருந்திருக்கிறார்கள் என்கிற தகவல் இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.