காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் மீது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் உள்ள ஹிந்தி ரசினிமா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஷாரூக்கான் நடித்து கடைசியாக வெளிவந்த 'பதான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. அப்படிப்பட்ட ஒரு படத்திற்குப் பின்பு வரும் படம் இது. மேலும், தமிழில் விஜய் நடிக்க சில சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ முதல் முறையாக ஹிந்தியில் இப்படத்தை இயக்குவதால் பாலிவுட்டினரும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் டிரைலர் தயாராகி சென்சார் ஆன நிலையில் அடுத்த சில தினங்களில் டிரைலர் வெளியாகும் என்று தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அதற்கான அறிவிப்பும் வெளியானது. நாளை ஜுலை 10ம் தேதி காலை 10.30 மணிக்கு டிரைலரை வெளியிட உள்ளார்கள். அதற்கு 'ஜவான் பிரிவியூ' என பெயர் வைத்துள்ளார்கள். பிரிவியூ என்பதை ஆங்கிலத்தில் 'Preview' என்றுதான் எழுத வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பில் அதை 'Prevue' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஏதும் குறியீடு இருக்கிறதா என்பது நாளை தெரிந்துவிடும்.
வியாபாரம் இத்தனை கோடியா?
வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் பிஸ்னஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் தியேட்டர் உரிமையை தவிர்த்து மற்ற உரிமைகளை பிஸ்னஸ் செய்துள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல், சாட்லைட், ஆடியோ உரிமைகளை சுமார் ரூ. 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.