நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடந்த 2005ல் தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் கஜினி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ஆமீர்கான் நடிப்பில் இந்த படத்தை ரீமேக் செய்து இயக்கினார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். ஹிந்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலையும் வாரி குவித்தது.
ஹிந்தியில் இந்த படத்தை வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் இந்த படத்தை இந்தியா முழுவதும் வாங்கி வெளியிட்டு லாபம் பார்த்தவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவரான அல்லு அரவிந்த். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஹிந்தியில் ஆமீர்கானை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அல்லு அரவிந்த், இப்படி வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போதும், எப்போதும் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது மட்டுமல்ல இந்த செய்தியை கேள்விப்பட்டு அமீர்கானின் நட்பு வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின்படி லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு ரீமேக் படங்களில் நடிக்கும் எண்ணத்தையே ஆமீர்கான் கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.