சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
இந்திய சினிமாவின் அடையாளமாக சின்னமாக கருதப்படுகிறவர் அமிதாப் பச்சன். 80 வயதை எட்டி உள்ள இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். ஆனாலும் ஹிந்தி தொலைக்காட்சிகள் அமிதாப்பை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. இதுகுறித்து பலரும் இதுபோன்ற ஆளுமைகளை கேலி பொருளாக்காதீர்கள் என் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் கண் முன்பே அப்படி ஒரு அவலம் அரங்கேறியதால் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு அபிஷேக் பச்சன் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முக்கிய விருந்தினராக பங்கேற்க அபிஷேக் பச்சன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்தார்.
இதனால் கோபமான அபிஷேக் பச்சன், ''நிறுத்துங்கள். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ஜோக் அடியுங்கள். என் தந்தையை கேலி செய்து பேசுவது நல்லது அல்ல'' என்று ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இந்த சம்பவம் அமிதாப் மற்றும் அபிஷேக் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.