எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. ஜனவரியில் வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திரபிரசாத்தே கதை எழுதி வருகிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ஆர்ஆர்ஆர் படம் வெளியானதும் சிறிய பட்ஜெட்டில் ரன்பீர் கபூரை வைத்து ஒரு ஹிந்தி படத்தை ராஜமவுலி இயக்கப்போவதாகவும், அந்த படத்தை சில மாதங்களிலேயே இயக்கி முடித்த பிறகு மகேஷ்பாபு படவேலைகளை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ராஜமவுலி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.