தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து விரைவில் தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ள நடிகர் இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காத்திருந்தனர். ஆனால், நடிகர் யாரையும் வெளியில் வந்து பார்க்கவில்லை. அவர் அன்றைய தினம் அந்த வீட்டிலேயே இல்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதியில் கடற்கரை அருகில் அமைந்துள்ள பிரம்மாண்ட வீட்டில் அன்றைய தினம் இரவு பிறந்தநாள் பார்ட்டியும் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அதில் கலந்து கொண்டார்களாம். கோலிவுட் வட்டாரங்களில் இந்த 'பார்ட்டி' பற்றிய பேச்சுத்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.