ஸ்ரீ சினி கிரியேஷன்ஸ் சார்பில் சீனுவாசன் என்பவர் ஆரவாரமில்லாமல் அதிரடியாக தயாரித்து வரும் படம் "இதயத்தில் இடம் கொடு".
எந்தப் பெண்ணையும் எளிதில் மடக்கிவிடக்கூடிய திறமையான ஒரு இளைஞனுக்கும், எந்த ஒரு ஆணையுமே காதலிக்க முடியாத சூழலில் இருக்கும் அழகான இளம் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் போராட்டமே கதையின் கரு.
படத்தின் கதாநாயகனாக புதுமுகம் உதயகுமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக இனியா என்பவர் நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் காதல், சென்ட்மெண்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறார் படத்தின் இயக்குநர் ராம் குமார். இவரே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அமைத்து இயக்குகிறார். குமார் என்பவர் இசையமைக்க, ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் சூட்டிங் மூணாறு, வாகமன், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கியிருக்கின்றனர். படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும், அதனைத்தொடர்ந்து படமும் ரிலீசாக இருக்கிறது.