ஐஏஎஸ்., அதிகாரியான துருவ் எனும் திவ்யேந்து சர்மா, சாக்ஷி எனும் பிரச்சி மிஸ்ராவை காதலிக்கிறார். தன் காதலிக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் லோன் மூலம் கார் வாங்குகிறார். ஒருக்கட்டத்தில் துருவ்வால் லோனை கட்டமுடியாத சூழல் எழ சம்பந்தப்பட்ட நிறுவனம் காரை பறிமுதல் செய்கிறது, இதனால் துருவவ்வின் காதலிலும் விரிசல் ஏற்படுகிறது. அதோடு இந்தக்கால பெண்களுக்கு உண்மையான காதலை காட்டிலும் பணத்தின் மீது தான் அதிகம் மோகம் இருக்கிறது என்பதையும் உணருகிறார் துருவவ். துருவவ்-சாக்ஷி மீண்டும் இணைந்தனாரா..? என்பது படத்தின் மீதிக்கதை!
முதன்முறையாக சோலோ ஹீரோவாக நடித்துள்ள திவ்யேந்து சர்மாவின் நடிப்பு ஓ.கே., தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். ஹீரோயின் பிரச்சி மிஸ்ராவின் நடிப்பு கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. ஏதோ ஒரு பிம்பம் தோன்றுவது போன்றே இருக்கிறது அவரது ரோல். ஜாக்கி ரெஷப்பின் நடிப்பும் ஓகே.,
மானு ரிஷியின் கதையை சரியாக கையாளவில்லை இயக்குநர் ஜபீந்தர் கவுர். உண்மை காதலுக்கும், போலியான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை சரியாக சொல்லவில்லை இயக்குநர். படத்தில் சில நல்ல பாடல்களும் இருக்கிறது, ஆனால் பிரபலமில்லாத முகங்கள் நடித்திருப்பதால் அந்த பாடலும் கம்மியாகவே தெரிகிறது.
இதுபோன்ற படங்களை பார்த்து உங்களது பணத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.