மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படம் "போரிடப்பழகு". நீலாம்பரி என்ற புதுமுகம் ஜோடி. சேகர்பாரதி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் தக்காளி சீனிவாசனிடம் உதவியாளராக இருந்தவர். "தமிழ்நாடு இன்று சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை கனிமவளக் கொள்ளைதான். காடுகளை வெட்டி மொட்டை அடிக்கிறோம். கிரானைட்களை வெட்டி எடுத்து நிலத்தடி நீரை பாழாக்குகிறோம். குறிப்பாக ஆற்றில் மணம் எடுத்து ஆறுகளை அழிக்கிறோம். இப்படியோ போனால் சாப்பாட்டுக்கு அயல்நாட்டில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைதான் வரும். அதனால் மணல் ஃமாபியா பற்றி மக்களுக்கு சொல்வததற்கா இந்தப் படத்தை உருவாக்குகிறோம்.
மணல் ஃமாபியா தலைவனாக ரியாஸ்கான் நடிக்கிறார். மணல் ஃமாபியாக்கள் எப்படி உருவாகிறார்கள். அவர்கள் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை தெளிவாக காட்ட இருக்கிறோம். ஆற்று மணல் அள்ளப்பட்டால் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதையும் சொல்கிறோம். மணல் ஃமாபியாவை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதையும், அவனது காதலும் உண்டு. நிஜமாகவே மணல் கொள்ளை நடக்கும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். என்கிறார் இயக்குனர் சேகர் பாரதி.