பிரிலியண்ட் மூவிஸ் எனும் புதிய பட நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப் படம் திவ்யா மீது காதல். கிராமத்து இளைஞர்களின் எதார்த்தமான வாழ்க்கையும், அந்த மண்ணுக்குரிய காதலும்தான் இதன் கதை! மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கும், பண்பாட்டிற்கும், சமூகத்தில் பல புரட்சிகரமான மாறுதல்களும் காரணகர்த்தா காதல்தானாம். அந்தக் காதலை புதிய களத்தில், புதுக் கோணத்தில் சொல்ல வருகிறது திவ்யா மீது காதல் திரைப்படம்.
ஜெ.ஆர். ஜோசப் இசையில், ராஜராஜன் ஒளிப்பதிவில் புதியவர் மதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் திவ்யா மீது காதல் திரைப்படத்தில் இயக்குனர் மதனே ஹீரோ, புரொடியூசர் என ஏகப்பட்ட அவதாரங்கள் எடுது்திருக்கிறார். நிஷா ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன், கலைப்புலி எஸ்.தாணு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட விஐபிக்கள் முன்னிலையில் சமீபத்தில் ஆடியோ வெளியீடு கண்ட திவ்யா மீது காதல் திரைப்படம் முழுதாக முடிந்து முதல் பிரதி தயார் என்பதால் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.