கலை களஞ்சியம் அன்னை கிருஷ்ணவேணி ஃபிலிம்ஸ்' பட நிறுவனம் சார்பில் வெங்கட் குலசேகரன், ஜெயந்திமாலா வேணுகோபால் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் "ஆண்டாள் அழகர்'. இப்படத்தை மகாதுரை என்பவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி வருகிறார். நேசன் இசையமைக்க, நவநீத கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இணைதயாரிப்பு ஆர்.தயாளன்.
"காசு இருக்கணும்' படத்தில் நடித்த விஷ்வா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஸ்ரீரஞ்சனி நடிக்கிறார். மற்றும் நீபா, "வெண்ணிற ஆடை' மூர்த்தி, சேது வினாயகம், மயில்சாமி, கிங்காங், ஜி.ஆர். ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம், திருவண்ணாமலை, கொடைக்கானல் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் நடந்துள்ளது. ஒரு பாடலை தாஜ்மகாலை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கவுள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் மகாதுரை கூறுகையில், ""இது ஒரு காதல் கதை. ஆனால் வில்லன் கிடையாது. ஆண்டாள் எப்படி போராடி இறைவனை கட்டிக் கொண்டாரோ அதுமாதிரி இந்த படத்தோட கதாநாயகன், கதாநாயகி வாழ்க்கையில் பல போராட்டங்கள் நடக்கும். வில்லன் இல்லையென்றாலும், போராட்டங்கள் இருக்கும். போராட்டம் நிறைந்ததுதானே காதல்! பார்வையாளர்களாக இருக்கும் மக்கள்தான் ஒரு படத்தின் டைரக்டர். அவங்க ஒரு சீன் எப்படி வரணும்னு விரும்புவாங்களோ அதுமாதிரிதான் படத்திலுள்ள கேரக்டர்களின் நடவடிக்கைகள் இருக்கும். அந்த மாதிரி ஒரு காதலை ரசிகனா இருந்து இப்படம் மூலம் சொல்லியிருக்கிறேன். கதைக்குப் பொருத்தமான கலைஞர்களை தேடிக் கண்டுபிடித்து நடிக்க வைத்திருக்கிறேன். நேசிக்கிற மாதிரி அந்த கேரக்டர்கள் இருக்கும். இரண்டு ஃபைட் சீன்கள். அன்புச்சந்திரன் அழகாக பண்ணியிருக்கிறார். கதாநாயகன் விஷ்வா சண்டைக் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அவருக்கு இதில் தலைமை பத்திரிகை நிருபர் வேடம். "நொச்சிக்குப்பம்' என்ற படத்தில் நடித்த ஸ்ரீரஞ்சினிதான் கதாநாயகி. அவரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். மொத்தத்தில் படம் நல்லா வந்திருக்கு. பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கி'' என்றார்.