ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ | ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே |
சின்னத்திரை சங்கத்தின் நிர்வாக குளறுபடியால் சங்கத்திற்கு பூட்டு போட்டு, காவல்நிலையத்தில் புகார் தரும் அளவுக்கு களேபரம் ஆகியுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கம் 2013ல் நடிகர் வசந்த்தால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்திற்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மொத்தம் 1,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டு போட தகுதியுள்ளவராவர்.
2018 இறுதியில் தேர்தல் நடந்தபோது, ரவிவர்மா தலைவராக தேர்வானார். 2019 இறுதியில் மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் ரவிவர்மா மீது பணம் கையாடல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நிர்வாகிகளிடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், சங்கத்தை கலைத்து, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி ஒரு தரப்பினர் தீர்மானம் இயற்றினர். ரவிவர்மா தரப்பிலோ, தலைவர் பதவியை விட்டு விலகாமல் மல்லுக்கட்ட, சங்கத்திற்கே பூட்டு போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 20ம் தேதி, ‛நிர்வாகம் கலைக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரியை வைத்து பொதுக்குழு கூட்டி கணக்கு வழக்குகளை கொடுத்து தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும்' என, காவல்துறை முன் நிர்வாகத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்த விவரம் இன்னும் சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி, மீண்டும் சங்கத்தில் களேபரம் ஆரம்பமாகியுள்ளது.