தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஜுலி. அதன் பின்பு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டார். இது அவருக்கு நெகடிவ் இமேஜை உண்டாக்கியது. அதன் பின் தொடர்ந்து நெகடிவ் ட்ரோல்களை மட்டுமே சந்தித்து வரும் ஜுலி பெரிதாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் ஜுலி தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சென்ட்ராயனுக்கு ஜோடியாக ஆடி வருகிறார். அதில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் போட்டியாளர்கள் தங்களுக்கு யார் மீது கோபம் இருக்கிறதோ அதை கூறி அங்கிருக்கும் பாக்சிங் பேக்கை குத்த வேண்டும் என சொல்லப்பட்டது.
அப்போது பேசிய ஜுலி, பிக் பாஸுக்கு பிறகு தான் ஒரு அழகி போட்டியில் நடுவராக சென்றதையும், அதில் ஒரு பெண்ணுக்கு பெஸ்ட் ஸ்மைல் என்கிற பட்டம் கொடுத்து மகுடம் அணிவிக்க சென்ற போது அந்த பெண் நீங்கள் எனக்கு மகுடம் அணிவிக்க வேண்டாம். அது எனக்கு அசிங்கம் என சொல்லி ஜூலியை மேடையிலேயே அசிங்கப்படுத்தியதையும் பற்றி கூறினார். அந்த பெண்ணை நினைத்து ஷோவில் தொங்கவிடப்பட்டிருந்த பாக்சிங் பேக்கை ஜுலி ஓங்கி குத்தினார்.