பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
திருமுருகன் இயக்கத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமான ஒளிபரப்பான சீரியல் நாதஸ்வரம். மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தச் சீரியலில் நாயகன் கோபியின் முறைப்பெண்ணாக நடித்திருந்தவர் கீதாஞ்சலி. இந்த சீரியலை அடுத்து ராதிகாவின் 'வாணி ராணி' 'நிறம் மாறாத பூக்கள்' 'ராஜா ராணி' உள்ளிட்ட சீரியலிலும், ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கீதாஞ்சலிக்கும் திருவாரூரைச் சேர்ந்த கிரிராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த இந்தத் திருமணத்தில் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. மணமகன் கிரிராஜ் துபாயில் வேலை பார்த்து வருவதால் விரைவில் கீதாஞ்சலியும் துபாய் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.