ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக இப்போதும் இருப்பவர் ராஜேஷ். கன்னி பருவத்திலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ், அதன் பிறகு தனி மரம், தை பொங்கல், நான் நானேதான், அச்சமில்லை அச்சமில்லை, சிறை படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த 7 நாட்கள் படம் அவரை நல்ல குணசித்ர நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு பயணங்கள் முடிவதில்லை, தனிக்காட்டு ராஜா, மெட்டி, தாய் வீடு, ஆட்டோகிராப் உள்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். ஓட்டல் நடத்தினர். சின்னத்திரையிலும் நடித்தார். தாயம், முடிவல்ல ஆரம்பம் தொடர்களில் நடித்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரோஜா என்ற தொடரில் நடிக்கிறார். விபத்தொன்றில் மனைவியையும் மகளையும் இழந்து விட்டு அன்புக்கு தவிக்கிற தந்தையாகவும், அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒரு இளம் பெண்ணுக்கு வக்கிலாகவும் வாழ்கிற கேரக்டரில் நடிக்கிறார்.