சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறது. முதன் முறையாக ஒரு நாவல், சின்னத்திரை சீரியலாகிறது. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய தலையணை பூக்கள் நாவல் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடராக எடுக்கப்படுகிறது.
பாலகுமாரன் தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய 14 நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய குடும்ப நாவல்தான் தலையணை பூக்கள். கிராமத்தில் விசாயம் பொய்த்து விட்டதால் அங்கிருந்து நகரத்து தனது நான்கு மகன்களுடன் பிழைப்பு தேடி சென்னை வரும் விவசாயி இங்கு தன் மனைவி பெயரில் லட்சுமி அண்ட் கோ என்ற பாத்திர கடை தொடங்குகிறார். மகன்களின் உழைப்பால் அது பெரிய நிறுவனமாக வளர்கிறது. அந்த வீட்டுக்கு மருமகள்கள் வரும்போது என்ன மாற்றங்கள் நடக்கிறது. என்பதுதான் கதை. தனித்தனியாக பிரியும் சகோதரர்கள், போட்டி நிறுவனங்கள் தொடங்குவது. ஒருரை வீழ்த்து ஒருவர் நினைப்பது என பணம் வந்த பிறகு பாசம் பறந்து போன கதையாக விரியும்.
இதில் குடும்ப தலைவராக டெல்லி குமார் நடிக்கிறர். மகன்களாக ஸ்ரீ, ஸ்ரீகர் நடிக்கிறார்கள். முதல் மருமகளாக நிஷா நடிக்கிறார். வருகிற 23ந் தேதி முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.