அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் | திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா |
மானாட மயிலாட, நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் கீர்த்தி நட்சத்திர தொகுப்பாளினி, வெவ்வேறு விதமான இரண்டு நிகழ்ச்சிகளை திறமையாக தொகுத்து வழங்கும் கீர்த்திக்கு பல சீரியல் வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து விட்டார். தற்போது சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக தனது பெற்றோரிடமும் அனுமதி வாங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
"சின்னத்திரையில் நல்ல தொகுப்பாளினி என்று பெயர் வாங்கிவிட்டேன். அடுத்து சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். முதலில் வீட்டில் சம்மதிக்கவில்லை. இப்போதுதான் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு முக்கியமான நல்ல கேரக்டர்களில்தான் நடிப்பேன்" என்கிறார் கீர்த்தி.