விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |
கலைஞர் டி.வி.,யில் ஜவனரி 18ம்தேதி முதல் தினமும் இரவு 8 மணிக்கு விளக்கு வச்ச நேரத்திலே என்ற பெயரில் புதிய சின்னத்திரை தொடர் ஒளிபரப்பாக உள்ளது. டைரக்டர் கே.பாக்யராஜ் திரைக்கதையில் உருவாகும் இந்த தொடரை டைரக்டர் சி.ரங்கநாதன் இயக்குகிறார். பொதுவாக நம் குடும்பங்களில் நடக்கிற விஷயம் தான் கதை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுகிற சம்பவங்கள்தான் கதையின் முடிச்சு. இந்தப் பெண்ணுக்கு அடுத்து என்ன நடக்கும்? எந்த மாதிரியான சோதனையை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்பது தொடரின் மற்ற கதாபாத்திரங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் மூலம் தொடரை பார்க்கிற ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தொடரின் நாயகிக்கு மட்டும் தெரியாது. இதனால் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் கூடி ஒருவித பரபரப்பு, தொடரைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இதில் சஞ்சீவ், சுஜிதா, கவுசிக், அனுராதா, கிருஷ்ண மூர்த்தி, சிவன் சீனிவாசன், சுரேஷ்வர், மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், சித்ரா லட்சுமணன், பாக்யஸ்ரீ. இளவரசன், நித்யா, கலாரஞ்சனி, ஷ்ரவன், `ஊர்வம்பு' லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி, சிவாஜி, குமரேசன், பாபுஸ், சுந்தர், மாஸ்டர் கனிஷ்கர், தனலட்சுமி ஆகியோருடன் டைரக்டர் சி.ரங்கநாதனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாடல்: வைரமுத்து. இசை: தேவா. எவர்ஸ் மைல் நிறுவனம் சார்பில் தொடரை தயாரித்து வழங்குபவர் ஈ.ராமதாஸ்.




