பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் சந்தியா ராகம். இதில் சந்தியா ஜகர்லாமுடி, அண்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மாயா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அண்டாராவுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் அண்டாரா முன்னேறி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் ஒருவரை காதலித்தேன். அவர் எனது பிறந்தநாளன்று அழகாக வாழ்த்துகள் சொல்லி புரொபோஸ் செய்தார். ஆனால், அந்த காதல் ப்ரேக்கப் ஆகிவிட்டது. எனவே, இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணமே இல்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வைத்தால் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.




