ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் சந்தியா ராகம். இதில் சந்தியா ஜகர்லாமுடி, அண்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மாயா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அண்டாராவுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் அண்டாரா முன்னேறி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் ஒருவரை காதலித்தேன். அவர் எனது பிறந்தநாளன்று அழகாக வாழ்த்துகள் சொல்லி புரொபோஸ் செய்தார். ஆனால், அந்த காதல் ப்ரேக்கப் ஆகிவிட்டது. எனவே, இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணமே இல்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வைத்தால் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.