அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரையில் சுந்தரி, திருமகள், மல்லி ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் கிரேசி தங்கவேல். அண்மையில் இவர் தனது பெயரை துஷிதா என்று இன்ஸ்டாகிராமில் மாற்றி வைத்துள்ளார். இதுநாள் வரையில் வில்லியாக நடித்து வந்த துஷிதா புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கண்மணி அன்புடன் தொடரில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன் வெற்றி ஹீரோவாக நடிக்கும் இந்த தொடரில் துஷிதா, மதுமிதா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இந்த முக்கோண காதல் கதையில் துஷிதாவின் கதாபாத்திரம் வில்லியாக மாறுமா? இல்லை நாயகியாக ஜொலிக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை இப்போதே தொற்றிக்கொண்டது.