சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
உதிரி பூக்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அஞ்சு தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் அஞ்சு, சிங்கப்பெண்ணே என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'நான் குண்டாக இருந்ததால் எனக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மலையாளத்தில் என் நடிப்பை தான் பார்த்தார்கள். உடலை பார்க்கவில்லை. குஷ்புவும், மீனாவும் கூட குண்டாக தான் இருந்தார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நான் திருமணமே செய்திருக்கமாட்டேன்' என்று கூறியுள்ளார்.