சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

கோலங்கள் என்கிற மாபெரும் ஹிட் தொடரை கொடுத்த திருசெல்வம் சில ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். கோலங்களை விடவும் எதிர்நீச்சல் தொடரின் கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்தது. எனவே, அந்த சீரியலுக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டி ஒளிபரப்பாக அனுமதி கிடைத்தது. ஆனால், இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அதை தொடர்ந்து வேல ராமமூர்த்தி அந்த தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்தாலும் சீரியல் பழைய வேகத்தை பெற முடியாமல் டிஆர்பியில் திணறி தற்போது முடிவுக்கே வந்துவிட்டது.
இந்நிலையில், இந்த தொடரில் பட்டம்மாள் என்கிற முக்கிய கேரக்டரில் நடித்த பாம்பே ஞானம் அண்மையில் அளித்த பேட்டியில், 'எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் தொடர்ந்து சொதப்பியதால் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தை வேறொரு டைம் ஸ்லாட்டிற்கு மாற்ற சொல்லி மெயில் அனுப்பினார்கள். அதனால் தான் இயக்குநர் சீரியலை ஒரேடியாக முடித்துவிட்டார்' என்று கூறியுள்ளார்.