நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கோலங்கள் என்கிற மாபெரும் ஹிட் தொடரை கொடுத்த திருசெல்வம் சில ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். கோலங்களை விடவும் எதிர்நீச்சல் தொடரின் கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்தது. எனவே, அந்த சீரியலுக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டி ஒளிபரப்பாக அனுமதி கிடைத்தது. ஆனால், இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அதை தொடர்ந்து வேல ராமமூர்த்தி அந்த தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்தாலும் சீரியல் பழைய வேகத்தை பெற முடியாமல் டிஆர்பியில் திணறி தற்போது முடிவுக்கே வந்துவிட்டது.
இந்நிலையில், இந்த தொடரில் பட்டம்மாள் என்கிற முக்கிய கேரக்டரில் நடித்த பாம்பே ஞானம் அண்மையில் அளித்த பேட்டியில், 'எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் தொடர்ந்து சொதப்பியதால் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தை வேறொரு டைம் ஸ்லாட்டிற்கு மாற்ற சொல்லி மெயில் அனுப்பினார்கள். அதனால் தான் இயக்குநர் சீரியலை ஒரேடியாக முடித்துவிட்டார்' என்று கூறியுள்ளார்.