முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
சின்னத்திரை பிரபலமான பாலா தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சமூக அக்கறையுடன் தன்னால் முடிந்த வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அதேபோல தான் நடிகர் லாரன்ஸும் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பாலாவை நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டிய லாரன்ஸ், இனி பாலா செய்யும் உதவிகளில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஒரு பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்தனர். மேலும், தற்போது கணவரை இழந்து மூன்று மகள்களை காப்பாற்றி வரும் ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து அவருக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
முதல் சவாரியாக இவர்கள் இருவரும் ஆட்டோவில் அமர, முருகம்மாள் அந்த ஆட்டோவை ஓட்டி செல்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அந்த பெண்ணுக்கு உதவி செய்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- பாலா ஆகிய இருவருக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.