லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

சின்னத்திரை பிரபலமான பாலா தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சமூக அக்கறையுடன் தன்னால் முடிந்த வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அதேபோல தான் நடிகர் லாரன்ஸும் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பாலாவை நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டிய லாரன்ஸ், இனி பாலா செய்யும் உதவிகளில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஒரு பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்தனர். மேலும், தற்போது கணவரை இழந்து மூன்று மகள்களை காப்பாற்றி வரும் ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து அவருக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
முதல் சவாரியாக இவர்கள் இருவரும் ஆட்டோவில் அமர, முருகம்மாள் அந்த ஆட்டோவை ஓட்டி செல்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அந்த பெண்ணுக்கு உதவி செய்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- பாலா ஆகிய இருவருக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.