100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

விஜய் டிவியின் டாப் ஷோக்களான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஒருமுறை வந்துவிட்டால் கட்டாயம் அவர்களுக்கு சினிமா கதவுகள் திறக்கும் என பலரும் அந்நிகழ்ச்சிகளில் முகம்காட்ட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை உறுதிப்படுத்துவது போல் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஸ்ருதி பெரியசாமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், 'மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் நான் பிரபலம் கிடையாது. ஆனால், இப்போது எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பலர் தங்கள் புரொபைலை எடுத்துக் கொண்டு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நான் யாரிடமும் வாய்ப்புகள் கேட்டு போனதில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் பிக்பாஸ் பார்த்து கிடைத்தது தான்' என்று கூறியுள்ளார்.




