20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
விஜய் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நடுவர்களாக இருந்து நடத்தி வந்த நிகழ்ச்சி 'கதாநாயகி'. கதாநாயகிகளைச் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பல இளம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபிசீனா ஆகியோர் தொடக்கத்திகத்தில் இருந்தே கவனம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று நடந்தது. இதில் எல்லோரும் எதிர்பார்த்தபடியே ரூபினா, ரூபிசீனா சகோதரிகள் கதாநாயகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் சுவாமிநாதன் கதாநாயகனாக நடிக்கும் சீரியலில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். மற்றொருவருக்கும் விரைவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.