காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா தான் காதலித்து வந்த அரவிந்த் சேகர் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருவருடம் மட்டும் ஆகியுள்ள நிலையில் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனையடுத்து செய்தி ஊடகங்களில் பல்வேறு வதந்திகளுடன் செய்தி வெளியாகி வந்தது. இதனால் வருத்தமடைந்த ஸ்ருதி சண்முகம் வதந்திகளை பரப்பாதீர்கள் என வீடியோ மெசேஜ் வெளியிட்டார்.
அதில், 'என் கணவர் கார்டியாக் அரஸ்ட் காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் பாடி பில்டர் அல்ல. அவர் ஒரு சிவில் என்ஜினியர். பாடி பில்டிங்கை பேஷனாக எடுத்துக்கொண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றார். ஆனால், என் கணவர் இறப்பு குறித்து செய்தி ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உங்களுக்கு விவரங்கள் வேண்டுமென்றால் என்னுடைய இந்த வீடியோவை எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக எதையும் பரப்பாதீர்கள் ' என அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்துள்ளார்.