அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
சின்னத்திரையில் ஒருகாலத்தில் மோஸ்ட் பேவரைட் ஜோடி என்றால் அது சரவணன் மீனாட்சியாக நடித்த மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் தான். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அண்மையில் அவர்கள் வாழ்வில் மகிழ்வூட்டும் விதமாக குழந்தை செல்வமும் கிடைத்தது. இந்நிலையில், சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கு இடையே தொடர்ச்சியாக பிரச்னையாக ஏற்பட்டு வருவது குறித்து மனம் திறந்துள்ள மிர்ச்சி செந்தில், சீரியல் நடிகைகளை திருமணம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மிர்ச்சி செந்தில் கூறியதிலிருந்து, 'பொதுவாக சீரியலில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் போலத்தான் நிஜ கேரக்டரும் இருக்குமென நடிப்பவர்களும் நினைத்து விடுகிறார்கள். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்கள் சுயரூபம் தெரியவர பிரச்னை ஆரம்பமாகிறது. இதனால் தான் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் டைவர்ஸ் செய்துவிடுகிறார்கள்.
நானும் கூட அப்படித்தான் ஸ்ரீஜாவை சீரியலில் வரும் மீனாட்சியாக பார்த்துவிட்டேன். பின்பு தான் புரிந்தது நான் மீனாட்சியை கல்யாணம் பண்ணல ஸ்ரீஜாவை கல்யாணம் பண்ணியிருக்கிறேன் என்று. சீரியல் ஸ்ரீஜா வேறு, நிஜ ஸ்ரீஜா வேறு. திருமணத்துக்கு பிறகு வேறுவிதமாக வாழ்க்கை அமைந்தாலும் காதலின் மகத்துவம் புரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்' என்று அட்வைஸ் செய்வது போல் கூறியுள்ளார்.