விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
தந்தை - மகள் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் கண்ணான கண்ணே. பப்லு என்ற பிருத்விராஜ், நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி, அக்ஷிதா போபைய்யா, மானஸ் சவாளி, ப்ரியா பிரின்ஸ் என பல முன்ன்ணி நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணான கண்ணே தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சில புகைப்படங்களை அந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். வருகிற மார்ச் முதல் வாரத்தில் கண்ணான கண்ணே தொடரின் கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 700 எபிசோடுகளை மட்டுமே கடந்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் விரைவிலேயே முடிவுக்கு வருவதால் ரசிகர்களில் சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.