''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தந்தை - மகள் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் கண்ணான கண்ணே. பப்லு என்ற பிருத்விராஜ், நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி, அக்ஷிதா போபைய்யா, மானஸ் சவாளி, ப்ரியா பிரின்ஸ் என பல முன்ன்ணி நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணான கண்ணே தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சில புகைப்படங்களை அந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். வருகிற மார்ச் முதல் வாரத்தில் கண்ணான கண்ணே தொடரின் கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 700 எபிசோடுகளை மட்டுமே கடந்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் விரைவிலேயே முடிவுக்கு வருவதால் ரசிகர்களில் சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.