பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
தமிழ் சின்னத்திரை நடிகர் அர்னவுக்கும் அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சில நாட்கள் சிறைக்கு சென்றார். தற்போது பெயிலில் ரிலீஸாகியுள்ள அர்னவ், செல்லம்மா தொடரிலேயே ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், 'செல்லம்மா' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பெண்கள் சிலர் அங்கே அர்னவ்வை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள், 'நீங்க எப்போ செல்லம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த குழந்தைய உங்க கூடவே வச்சுக்க போறீங்க?. அந்த மேகாவ துரத்திவிட்ருங்க. அப்போதான் சீரியல் நல்லாருக்கும்' என்று கூறுகின்றனர்.
அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அர்னவின் நிஜவாழ்க்கையும், அவர் நடிக்கும் சீரியலின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதை சுட்டிக்காட்டி 'இவனே பொண்டாட்டிய விரட்டிவிட்டுட்டு ஊர்சுத்திட்டு இருக்கான். இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே இந்த அப்பாவி பெண்கள்' என அர்னவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.