கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தனது திறமையான நடிப்பால் எட்டமுடியாத உயரத்தை தொட்டு புகழ் உச்சியில் இருக்கிறார். ஆனால், அவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை தான் ஒரு படத்தில் டூப் போட்டுள்ளார். 'சூது கவ்வும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலில் ராவ், தொடர்ந்து பல தமிழ் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். அவ்வப்போது வெள்ளித்திரை கைக்கொடுக்காமல் போனால் சின்னத்திரை பக்கம் வந்துவிடுவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்துள்ள அஞ்சலி ராவ், தென்னிந்திய சின்னத்திரை நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த அஞ்சலி ராவ் தான் 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோனேவுக்காக டூப் போட்டுள்ளார்.
மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவான அந்த அனிமேஷன் படத்தில் தீபிகா படுகோனேவின் முகபாவங்களுக்காக அஞ்சலி ராவ் தான் டூப் போட்டு நடித்துக்கொடுத்துள்ளார். சமீபத்தில் கலர்ஸ் டிவியின் 'பச்சக்கிளி' தொடரின் மூலம் அஞ்சலி ராவ் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இந்த தகவலானது தற்போது மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.