'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சீரியல் ஷூட்டிங்கின் போது தீ விபத்திலிருந்து மயிரிழையில் தப்பி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகுமார். 'வானத்தைப் போல' தொடரில் நாயகனாக ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இந்த தொடரானது நடிகர்கள் மாற்றத்தால் சில சறுக்கல்களை சந்தித்தாலும் இப்போது சூடுபிடிக்க தொடங்கி டிஆர்பியில் முன்னேறி வருகிறது.
இந்நிலையில், கொம்பன் படத்தில் ராஜ்கிரண் சாமியாடி வரும் ட்ராக்கை போல இதிலும் ஒரு எபிசோடை காட்சியாக்கி உள்ளனர். அதில், ஸ்ரீகுமார் கருப்பசாமி வந்து ஆக்ரோஷமாக நடந்து வரும் காட்சிகளும், எதிரிகளுடன் சண்டையிடும் காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது ஸ்ரீகுமார் தனது கைகளில் இருந்த தீப்பந்ததால் பைட்டர் ஒருவரை அடிக்க, தீப்பந்தம் சிதறி ஸ்ரீகுமாரின் காலின் அருகே விழுகிறது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஸ்ரீகுமார், பந்தத்தை தன் கால்களால் உடைத்து தள்ளுகிறார். இல்லையெனில் கண்டிப்பாக அவர் ஆடையில் தீப்பிடித்து பெரிய விபத்தாக மாறியிருக்கும். ஒருவழியாக அந்த விபத்திலிருந்து ஸ்ரீகுமார் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பித்துவிட்டார். இந்த வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதேப்போல தி.நகரின் ஒரு பிரபல கடையில் தீ விபத்து ஏற்பட்ட போது ஸ்ரீகுமார் தனது குடும்பத்துடன் மாட்டிக்கொண்டார். அப்போதும் பெரிய அளவில் பாதிப்பில்லாமல் அங்கே இருந்து மீட்கப்பட்டார். இந்த இரண்டு செய்திகளையும் ஒப்பிட்டு 'ஸ்ரீகுமார் சார் உங்களுக்கு நெருப்புல கண்டம்... பாத்து ஜாக்கிரதை' என கருத்து பதிவிட்டுள்ளனர்.